Tuesday 16 August 2011

சித்திரவதை செய்யாதே.....

உன்னை மறக்க நினைக்கும் 
போது தான் அதிகமாக 
நினைக்கிறேன்....

உன்னை வெறுக்க நினைக்கும் 
போது தான் அதிகமாக 
நேசிக்கிறேன்.....

உன்னை விட்டு விலக துடிக்கிறேன் 
ஆனால் ஏனோ தெரியவில்லை 
முன்பை விட அதிகமாய் என் 
மனதினை நெருங்குகிறாய் ....

உன் நினைவுகளை அழிக்க நினைக்கயில்,
இரவில் விண்ணை ஆட்கொண்டிருக்கும் 
நட்சத்திரகளை போல உன் நினைவுகள் 
என்னை ஆட்கொள்கிறது....

என்னை கொன்று விடு அல்லது 
வாழ விடு ஆனால் என்னை 
இப்படி சித்திரவதை செய்யாதே.....

உன்னை மன்றாடி கேட்கிறேன் 
உன்னை உண்மையாக நேசித்த 
குற்றத்திற்காகவாது விட்டுவிடு 
அன்பே.....!!!!!!!